யோன்த1:ஸுகோ2ன்த1ராராமஸ்த1தா2ன்த1ர்ஜ்யோதி1ரேவ ய: |
ஸ யோகீ ப்1ரஹ்மனிர்வாணம் ப்3ரஹ்மபூ4தோ1தி4க3ச்1ச1தி1 ||24||
யஹ—--யார்; அந்தஹ-ஸுகஹ—--தன்னுள்ளே மகிழ்ச்சியுடன் இருக்கிறாரோ; அந்தஹ--ஆராமஹ—தன்னுள்ளே அனுபவித்தலில் இருக்கிறாரோ; ததா—--அத்துடன்; அந்தஹ-ஜோதிஹி----உள் ஒளியால் பிரகாசிக்கிறார்களோ; ஏவ—--நிச்சயமாக; யஹ--—யார்; ஸஹ--—அவர்; யோகீ--—யோகி; ப்ரஹ்ம-நிர்வாணம்--—பொருள் இருப்பிலிருந்து விடுதலை அடைந்து; ப்ரஹ்ம-பூதஹ----இறைவனுடன் ஐக்கியமான; அதிகச்சதி—--அடைகிறார்.
BG 5.24: எவர்கள் தங்களுக்குள் மகிழ்ச்சியாக இருப்பார்களோ, கடவுளின் மகிழ்ச்சியை அனுபவித்து, உள்ளொளியால் பிரகாசிக்கிறார்களோ, அத்தகைய யோகிகள் இறைவனுடன் ஐக்கியமாகி ஜட வாழ்விலிருந்து விடுபடுகிறார்கள்.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
'உள்ளொளி' என்பது கடவுளின் அருளால் நாம் அவரிடம் சரணடையும் போது, உணர்தல் வடிவில் உள்ளிருந்து அருளப்படும் தெய்வீக அறிவாகும். யோக3 த3ரிஷனம் கூறுகிறது:
ரித1ம்ப4ரா த1த்1ர பிரஞ்ஞா (1.48)
‘சமாதி நிலையில், ஒருவரின் புத்தி சத்தியத்தை உணர்ந்து நிரம்புகிறது.’.
ஆசை மற்றும் கோபத்தின் தூண்டுதல்களைத் தாங்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அர்ஜுனனிடம் அறிவுறுத்திய பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் இதைப் பயிற்சி செய்வதற்கான ரகசிய வழிமுறையை வெளிப்படுத்துகிறார். யோன்த1ஹ ஸுகோ2 வார்த்தைகளுக்கு 'உள்ளத்தில் மகிழ்ச்சியாக இருப்பவர்' என்று பொருள். வெளிப்புறப் பொருட்களால் நாம் பெறும் மகிழ்ச்சி ஒருவிதம், கடவுளில் மனதை உள்வாங்கும்போது உள்ளிருந்து அனுபவிக்கும் மற்றொரு வகையான மகிழ்ச்சி. நாம் உள்ளத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கவில்லை என்றால், வெளிப்புற சோதனைகளை நிரந்தரமாக எதிர்க்க முடியாது. ஆனால் இதயத்தில் பாயத் தொடங்கும் கடவுளின் பேரின்பத்தை ஒப்பிடுகையில், நொடிப்பொழுதிற்கான வெளிப்புற இன்பங்கள் அற்பமானவை மற்றும் துறப்பது எளிது.
முனிவர் யமுனாச்சார்யார் கூறுகிறார்:
யதா3வதி4 மம சேத1ஹ கி1ருஷ்ண-ப1தா3ராவிந்தே3
நவ-நவ-ரஸ-தா4மனுத்யத1 ரந்து1ம் ஆஸீத்1
த1தா1வதி4 ப3த1 நாரி ஸங்க3மே -ஸ்மர்யமானே
ப4வதி1 முக2-விகா1ரஹ ஸுஷ்டு1நிஷ்டீ2வநம் ச1
‘கிருஷ்ணரின் தாமரை போன்ற பாதங்களில் தியானம் செய்யத் தொடங்கியதிலிருந்து, நான் எப்போதும் பெருகிய ஆனந்தத்தை அனுபவித்து வருகிறேன். தற்செயலாக சிற்றின்பம் பற்றிய எண்ணம் என் மனதில் தோன்றினால், நான் அந்த எண்ணத்தை உமிழ்ந்து, வெறுக்கத்தக்க வகையில் என் உதடுகளைச் சுருட்டிக் கொள்கிறேன்.’